பிரச்சினை

 அனுப்புநர்,

     மு.சண்முகநாதன்

      21, காந்திஜி ரோடு,

      புதூர் அஞ்சல்,

      இளையான்குடி தாலுகா,

      சிவகங்கை மாவட்டம்.

      630 709.


பெறுநர்,

      மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், 

     தமிழ்நாடு அரசு.


ஐயா,

   பொருள்: வருமானமற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை....


     வணக்கம். இந்த கடிதமானது ஒட்டுமொத்தமான தனியார் பள்ளி ஆசிரியர்களின் அடிவயிற்று குரலாய் ஒலிக்க முன் வந்துள்ளேன்.

      கொரோனா என்னும் தீநுண்கிருமியால் கடந்த ஓராண்டுக்கு மேலாக பேரிடர் நிலையில் என்னைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்களும், அவர்தம் குடும்பங்களும் சொல்லொன்னா துயரத்தில் மீள்வதற்கு வழியில்லாமல் அவதிப்படுவதை இந்த சமுதாயம் எப்படி உற்று நோக்குகிறது என்று தெரியவில்லை.

      எந்தவொரு நாட்டில் விவசாயிகளும், ஆசிரியர்களும் அடி வயிற்று பசியை நிறைவு செய்ய இயலாமல் தத்தளிக்கின்றனரோ, அந்நாடு நல்ல கட்டமைப்பை கொள்ளவில்லை என்பதே உண்மை. பேரிடர் காலத்தில் பெயரில்லாத முகவரியாய் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் நிலையால் தள்ளப்பட்டுள்ளனர்.

      "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்றார்கள் முன்னோர்கள்.... இன்று கற்கை நன்றால் பிச்சை புகிவதாக எங்கள் வாழ்வாதாரம் வாழ்விழந்து நிற்கிறது.

      படித்தோம்; தலைமுறைகளை பண்படுத்துகிறோம்; தலைநிமிர் சமுதாயத்திற்கு நீர் கொடுக்கும் வேராக நிலம் கீழாக பணிந்து பணி புரிகின்றோம். ஆளுமை சமுதாயத்தை தாங்கிப் பிடிக்கும் காரணிகளில் காரணங்கள் கூறாத கருவிழியில் மொழி படைத்து; விரல் நுனியில் மொழி விதைத்து; இதழ் நுனியில் இகம் படைக்கும் பணிகளை தவிர வேறென்ன தவறு செய்தோம். 

      நாங்கள் படித்தது குற்றமா? ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தது குற்றமா? தனியார் பள்ளிகளில் காலநேரம் கூட பாராமல் மாணவர்கள் உயர பாடுபட்டது குற்றமா? எதுவென தெரியவில்லை.... நான் பட்டினி கிடப்பதில் தவறில்லை, எனது படிப்பால்; படிப்பு சார்ந்த பணியால் என் குழந்தைகளும் பட்டினி கிடப்பதே கற்றவனுக்கான அடையாளம் என்றாகிப் போனதே மன வேதனையாக எழுகிறது.

    இங்கு யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. பேரிடர் நிதியால் என்னைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படுமா? அவர்தம் குடும்பங்கள் அடிவயிற்றுப் பசியை போக்கிட இயலுமா? 

முடிவு முதல்வராகிய உங்கள் கையில்....


    இறுதியாக ஒன்று,

 *கற்றவன் வீதியில் கையேந்திடாமல் காப்பீர்* என்ற கடைசி நம்பிக்கையில்

காத்திருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களில் ஒருவனாக....


ஒட்டுமொத்த குரலாய்,

மு.சண்முகநாதன்,

9791781543


 *நகல்:*

1. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


2. கல்வித்துறை செயலாளர்

Comments

Popular posts from this blog

Trip to ooty